This is a Brave Payments publisher verification file. Domain: batticaloamunicipal.blogspot.com Token: 64f23aa52896f0b3e13d07b05222ab8438fc3539e56dd482bad0a2549f9c926b

மட்டு. மாநகரசபை சுத்தானந்தா பாலர் பாடசாலை விளையாட்டு விழா


மட்டக்களப்பு மாநகரசபையினால் நடாத்தப்படும் நாவற்குடா சுத்தானந்தா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு மாநகர ஆணையாளர் திரு.நா.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் 25.07.2018 அன்று இடம்பெற்றது. 

சிவஸ்ரீ உ.ஜெயகிருஸ்னா  அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வெற்றியீட்டிய மற்றும் பங்குபற்றிய சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் கௌரவ தி.சரவணபவன், மாநகர பிரதி முதல்வர் கௌரவ க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் கௌரவ ம.நிஸ்கானந்தராஜா, பாலர் கல்விப் பணியகப் பணிப்பாளர் திரு.எஸ்.சசிதரன், கலாபுஷணம் எஸ்.வைரமுத்து மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ச.சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திருமதி.சுந்தரமதி வேதநாயகம் அவர்களின் வழிநடத்தலில் சிறப்பாக இடம்பெற்றது.